நீரில் நடப்பவர்கள்

நீர்ப் பூச்சிகள்

ஏ. கே. ராமானுஜன்

ஓரம் வை, இந்தக் கனவை ஓரமாக வை.
தேடு
ஒல்லிக் காலும்,
முட்டைக் கண்ணும் கொண்ட அந்த நீர்ப் பூச்சிகளை.
பார், அவை
நீர் படியா குழாய்க் கால்களும்
எடையற்ற உடலுமாய்
நீரோட்டத்தின்
அலைப் பரப்பில் உட்கார்ந்திருப்பதை.

இல்லை, நீரில் நடப்பவர்கள்
இறைதூதர்கள் மட்டுமல்ல. இந்தப் பூச்சி
ஒளிச் சரிவொன்றில் உட்கார்ந்தபடி
கண் முங்க மூழ்குகிறது
தன் சிறிய வானத் துண்டில்.

பின்னூட்டமொன்றை இடுக