ஜூலியா தெ பர்கோஸுக்கு

ஏற்கனவே நான் உன் எதிரியென்று முணுமுணுக்கிறார்கள், கவிதையில் உலகத்தை எனக்கே அளித்துக்கொள்கிறேனாம். அவர்கள் பொய் சொல்கிறார்கள், ஜூலியா தெ பர்கோஸ். அவர்கள் பொய் சொல்கிறார்கள், ஜூலியா தெ பர்கோஸ்.

இடதுகைப் பட்டமளிப்பு

நாம் ஏற்கனவே வெளியாட்கள்தான். பெண்கள், பெண்கள் என்பதனால், இந்தச் சமூகத்தில் ஆண்கள் தாமாக அறிவித்துக் கொண்ட சட்டதிட்டங்களுக்கு வெளியாட்களாகவே இருக்கிறோம், இங்கே மனிதர்கள் மனிதன் என்று அழைக்கப்படுவர், மரியாதைக்குரிய ஒரே கடவுள் ஆண், ஒரே திசை மேல்நோக்கி. இது அவர்களது தேசம்; நாம் நமது தேசத்தைக் கண்டுகொள்வோம்.

கடன் அல்லது ஒரு சிறிய விடுமுறை

காதல் என்பது ஒருவரை உலகத்திடமிருந்து இன்னொருவர் சற்று நேரத்திற்கு கடன் வாங்கிக் கொள்வதுதான் என்ற எண்ணம் அவளுக்கு எப்படியோ தோன்றிவிட்டிருந்தது. அவளுக்கு உடனே பாவ மன்னிப்பு கேட்க வேண்டும் போலிருந்தது. வெறுமனே மன்னிப்பு கேட்டால் கூட போதும். சாரி, சாரி என்று சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்.

அமலா எப்படி செத்தாள்?

அமலா எப்படி செத்தாள்? நன்றி: நீலம் உன் மொழியில் நீ பேசாதிரு. உன் மொழி என்னைக் கவர்வதாயில்லை என்பதற்கும் மேலாக அது ஓர் கொலைக்கருவியைப் போலவிருக்கிறது. மேலும் அது என் நினைவுகளைப் புனைவென்கிறது. மெர்சேவும்…, ஹரி ராஜலெட்சுமி ஒரு ஊர்ல அமலான்னு ஒருத்தி இருந்தா, அழகின்னா அழகி, அப்படியொரு அழகி, நெசமான பொம்பள இல்லன்னு ஒருத்தராலயும் சொல்லிற முடியாது. . . என்று தொடங்கும் இதே கதையை அமலா பல முறை கேட்டிருக்கிறாள். ஆனால் ஒரு சிறிய … Continue reading அமலா எப்படி செத்தாள்?

ஒருத்தி கவிதைகளுக்கும் இரவுகளுக்கும் திரும்புகிற பொழுது – சிறுகுறிப்பு

பொன்முகலியின் கவிக்குரல் மீது எனக்கொரு ஆழமான நம்பிக்கையின்மை இருக்கிறது. அவை வெளிப்படுத்தும் எதையும் நான் நேரடியாக நம்பிவிடுவதில்லை. நிறைய ஏமாற்றும் ஒரு நண்பரைப் போல. அதே நேரம் நட்பைக் கைவிடும் அளவு மோசமில்லை. எனவே அவரின் கவிதைகளில் போலித்தனமில்லாத ஒரு மானுடத்தைக் கண்டுகொள்கிறேன், ஆனால் நேரடியாக அல்ல. தியாகிப் பட்டத்துக்காய் ஆற்றில் குதிக்கும் ஒரு நபரைப் போல, உறவுகளை இருபுறமும் கூருள்ள கத்தியாகவே அணுகும் நபரைப் போல, தனது புலம்பல்கள் மீது மாத்திரமே அதீத அக்கறைகொண்ட நபரைப் போல, எப்போதும் குருதி சிந்தத் தயாராக இருக்கும் காதலரைப் போல மிகுந்த கவனத்துடனே நான் அவரின் ஒவ்வொரு கவிதையையும் அணுகுகிறேன்.